தமிழகம் தமிழகம் முழுவதும் கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணி மீண்டும் தொடங்கியது!: பொதுமக்கள் ஆர்வம்..!! Jun 12, 2021 கொரோனா T.N. குமரி: கொரோனா தடுப்பூசி செலுத்துவது கடந்த சில நாட்களாக நிறுத்தப்பட்ட நிலையில், தற்போது மீண்டும் தடுப்பூசி போடும் பணி நடைபெறுவதால் கூட்டம் அதிகரித்தது. கன்னியாகுமரி மாவட்டத்தில் பல இடங்களில் ஒரு வாரத்திற்கு பிறகு தடுப்பூசி போடும் பணி இன்று துவங்கியது. சுசீந்திரத்தில் 250 பேருக்கு மட்டுமே இதற்கான டோக்கன் கொடுக்கப்பட்டது. டோக்கன் வாங்கியவர்கள் மட்டும் அல்லாமல் புதிதாக டோக்கன் வாங்குவதற்கு ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் திரண்டதால் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதேபோல் கரூர் மாவட்டத்தில் 5 நாட்களுக்கு பிறகு கொரோனா தடுப்பூசி போடப்படுகிறது. இந்த மாவட்டத்திற்கு 1700 டோஸ் தடுப்பூசி ஒதுக்கப்பட்டிருக்கிறது. மாவட்டம் முழுவதும் 26 முகாம்களில் தடுப்பூசிகள் போடப்படுவதால் பொதுமக்கள் நீண்ட வரிசையில் ஆர்வத்துடன் காத்திருந்து தடுப்பூசி செலுத்திக் கொள்கின்றனர். புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை, அன்னவாசல் உள்ளிட்ட இடங்களில் 8 நாட்களுக்கு பிறகு தடுப்பூசி போடும் பணி தொடங்கியுள்ளது. அரசு மருத்துவமனைகள் மற்றும் சிறப்பு முகாம் அமைத்து தடுப்பூசி போடும் பணி நடைபெற்று வருகிறது. இதேபோல் உளுந்தூர்பேட்டை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் கொரோனா தடுப்பூசி செலுத்தி கொள்வதற்கு பொதுமக்கள் ஆர்வத்துடன் வந்துள்ளனர்.
கிண்டி காந்தி மண்டப வளாகத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் பராமரிப்பு பணிகளை ஆய்வு செய்தார் மக்கள் தொடர்பு துறை இயக்குநர் மரு.ரா.வைத்தியநாதன்
நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.பி.கே. ஜெயக்குமார் தனசிங் மறைவிற்கு செல்வப்பெருந்தகை இரங்கல்
மீன்பிடி தடை காலம் அமல்; நாகை, தஞ்சை, புதுகை, காரைக்காலில் 120 கோடி ரூபாய் வர்த்தகம் பாதிப்பு: படகு, வலை சீரமைப்பு பணியில் மீனவர்கள் மும்முரம்
கொடைக்கானலில் இ-பாஸ் முறை ரத்து செய்யப்படாவிட்டால் உணவகங்கள், விடுதிகள் கோடை சீசன் முழுவதும் அடைக்கப்படும்: ஹோட்டல் சங்கத்தினர்
அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் பொறியியல் கல்லூரிகளில் வரும் 15ம் தேதி முதல் செமஸ்டர் தேர்வுகள் தொடங்குகிறது.
5 ஆண்டு ஒருங்கிணைந்த சட்டப்படிப்புகளுக்கு மே 10 முதல் 31 வரை விண்ணப்பிக்கலாம்: அம்பேத்கர் சட்டப் பல்கலை அறிவிப்பு
வலுக்கும் எதிர்ப்பு!: இ-பாஸ் முறையை ரத்து செய்யாவிட்டால் கொடைக்கானலில் உள்ள விடுதிகள், ஓட்டல்கள் கோடை சீசன் முழுவதும் மூடப்படும் என எச்சரிக்கை..!!
தமிழ்நாட்டில் 109 டிகிரி வெயில் சுட்டெரிக்கும்; 7,8 தேதிகளில் மழைக்கு வாய்ப்பு சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அளித்து வரும் ஊக்கத்தால் 3 ஆண்டுகளில் 8384 புத்தாக்கத் தொழில்கள் தொடக்கம்..!!