சிலிண்டர் தட்டுப்பாடு விவகாரத்தில் மக்கள் நலனை காக்க ஒன்றிய அரசு என்ன செய்ய போகிறது?: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

சென்னை: சிலிண்டர் தட்டுப்பாடு விவகாரத்தில் மக்கள் நலனை காக்க ஒன்றிய அரசு என்ன செய்ய போகிறது? என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார். ‘மேற்கு ஆசிய போரால் மக்கள் பாதிப்படைய கூடாது என மாநில அரசின் அதிகாரத்துக்குட்பட்டு நடவடிக்கை. உணவகங்களுக்கு மின் கட்டணத்தில் யூனிட்டுக்கு ரூ.2 மானியம் உள்ளிட்ட அறிவிப்புகளை அரசு அறிவித்துள்ளது. சிறு, குறு நிறுவனங்கள் மின் அடுப்புகள், மின் சூடேற்றிகள் கொள்முதல் செய்ய மானியத்துடன் கடன். தமிழ்நாடு அரசின் அதிகாரங்களுக்குட்பட்ட நடவடிக்கைகளை எடுத்துவிட்டோம்’ என முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.

Related Stories: