சென்னை: கவிஞர் வைரமுத்துவுக்கு ஞானபீட விருது அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் அவருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். “தமிழில் இதுவரையில் அகிலனும் ஜெயகாந்தனும் மட்டுமே பெற்றிருந்த ஞானபீட விருது கவிப்பேரரசு வைரமுத்துவுக்கு அறிவிக்கப்பட்டிருப்பது அவரையும் நம்மையும் மகிழ்ச்சிக் கடலில் ஆழ்த்தியிருக்கிறது. தலைவர் கலைஞர் இருந்திருந்தால் கவிப்பேரரசை உச்சிமுகர்ந்து பாராட்டியிருப்பார். அவரிடத்தில் நான் நின்று கவிப்பேரரசுவை வாழ்த்துகிறேன். கவிப்பேரரசைத் தமிழ்நாடே வாழ்த்துகிறது!” என முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.
கவிஞர் வைரமுத்துவுக்கு ஞானபீட விருது அறிவிப்பு: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து!
- முதல் அமைச்சர்
- மு. கே.
- ஸ்டாலின்
- சென்னை
- கவிஞர்
- பெருமாள் கே. ஸ்டாலின்
- கவிப்பேரரசு வைரமுத்து
- அகிலன்
- ஜெயகந்தன்
