தமிழகம் சாராயம் கிடைக்காத விரக்தி!: அரியலூரில் சானிடைசர் குடித்து ஒருவர் பலி...2 பேர் கவலைக்கிடம்..!! Jun 10, 2021 அரியலூர்: அரியலூரில் சாராயம் கிடைக்காத விரக்தியில் சானிடைசர் குடித்த இளைஞர் பரிதாபமாக உயிரிழந்தது பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. தமிழகத்தில் கொரோனா தீவிரம் எதிரொலியாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு டாஸ்மாக் கடைகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. இதனால் போதைக்கு அடிமையாக கிடக்கும் மதுபிரியர்கள், மது கிடைக்காத விரக்தியில் சானிடைசரை குடித்து மரணிப்பது, வீட்டிலேயே கள்ள சாராயம் காய்ச்சுவது போன்ற செயல்களில் ஈடுபடுவது அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. இந்நிலையில் அரியலூர் அருகே சானிடைசர் குடித்து ஒருவர் பலியாகியுள்ளார். அரியலூர் மேல் அக்ரஹாரம் தெருவை சேர்ந்த இளங்கோவன் என்ற ஆட்டோ ஓட்டுனரே உயிரிழந்தவர் ஆவார். இளங்கோவன் தனது நண்பர்கள் மோகன் மற்றும் சரவணனுடன் சேர்ந்து கடந்த 7ம் தேதி போதைக்காக சானிடைசரை குடித்துள்ளனர். இதனால் உடல்நலம் பாதிக்கப்பட்ட இளங்கோவன், அரியலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். பின்னர் தஞ்சை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மேல் சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். மேலும் உடல்நலம் பாதிக்கப்பட்ட மோகன் மற்றும் சரவணன் ஆகிய இரண்டு பேரும் புதுச்சேரி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். சானிடைசர் குடித்து இளைஞர் இளங்கோவன் உயிரிழந்தது தொடர்பாக அரியலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் பயணிகளின் வசதிக்காக 5 ஏடிஎம் மையங்கள்: சிஎம்டிஏ நிர்வாகம் அறிவிப்பு
தமிழ்நாட்டில் அடுத்த 3 மணி நேரத்தில் தேனி, தென்காசி உள்ளிட்ட 8 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்
சூரம்பட்டி அணைக்கட்டில் இருந்து செல்லும் நஞ்சை ஊத்துக்குளி கிளை வாய்க்கால் தண்ணீரில் செத்து மிதந்த மீன்கள்
“பிரதமர் மோடியை கொன்று விடுவேன்” என்ஐஏ கட்டுப்பாட்டு அறையை தொடர்புகொண்டு இந்தியில் மர்ம நபர் கொலை மிரட்டல்: சென்னையில் பரபரப்பு
நெல்லை காங்கிரஸ் பிரமுகர் ஜெயக்குமார் தனசிங் மரண வழக்கு விசாரணையை சி.பி.சி.ஐ.டி.க்கு மாற்றி டிஜிபி உத்தரவு..!!