பொலிவியா : மத்திய தென் அமெரிக்க நாடான பொலிவியா நாடாளுமன்றத்தில் ஆளும் கட்சி மற்றும் எதிர்கட்சி எம்பிக்கள் மோதிக் கொண்டதால் பரபரப்பு ஏற்பட்டது. தலைநகர் லாபஸ் நகரில் உள்ள நாடாளுமன்றத்தில் நேற்று வழக்கமான கூட்டம் நடைபெற்றுக் கொண்டு இருந்தது. அப்போது முன்னாள் இடைக்கால அதிபர் ஜியானான் மீதான கைது நடவடிக்கை குறித்து எதிர்க்கட்சி எம்பிக்கள் கேள்வி எழுப்பினர். இதன்மீதான விவகாரத்தில் உள்துறை அமைச்சர் பதில் அளித்துக் கொண்டு இருந்தார். அவரது பதிலில் திருப்தி அடையாத எதிர்கட்சியினர் முழக்கம் எழுப்பியபடி இருந்தனர்.