பாரீஸ்: கிராண்ட்ஸ்லாம் தொடர்களில் ஒன்றான பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் தொடர் பாரீசில் நடந்து வருகிறது. இதில் ஆடவர் ஒற்றையர் பிரிவில் இன்று அதிகாலை நடந்த 4வது சுற்று போட்டியில், 6ம் நிலை வீரரான ஜெர்மனியின் அலெக்சாண்டர் ஸ்வரெவ் (24), ஜப்பானின் நிஷிகோரி(31) உடன் மோதினார். இதில் ஸ்வரெவ் 6-4, 6-1, 6-1 என எளிதாக வெற்றிபெற்று கால் இறுதிக்குள் நுழைந்தார். ஸ்பெயினின் டேவிடோவிச் போகினா, ரஷ்யாவின் டேனியல் மெட்வடேவ், கிரீசின் சிட்சிபாஸ் ஆகியோரும் கால்இறுதிக்குள் நுழைந்தனர்.