இந்தியா மஹாராஷ்டிராவில் கரும்பூஞ்சை நோய் சிகிச்சைக்கு 3 வகையான கட்டணங்களை நிர்ணயித்து உத்தவ் தாக்கரே அரசு உத்தரவு..!! Jun 05, 2021 ஊத்தாவ் தாகேர் ஊராட்சி மகாராஷ்டிரா மும்பை: மஹாராஷ்டிராவில் கரும்பூஞ்சை நோய் சிகிச்சைக்கு 3 வகையான கட்டணங்களை அம்மாநில அரசு நிர்ணயித்துள்ளது. மஹாராஷ்டிராவில் கரும்பூஞ்சை நோயால் பாதிக்கப்படுவோரை காப்பாற்ற, அனைவருக்கும் தரமான சிகிச்சை அளிக்க உத்தவ் தாக்கரே அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. அதன்படி கரும்பூஞ்சை நோய்க்கு தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற மூன்று வகையில் கட்டணம் நிர்ணயித்துள்ளது. முதல்நிலை நகரங்கள் ஏ என்றும் இரண்டாவது நிலையில் உள்ள நகரங்கள் பி மற்றும் இவை நீங்கலாக உள்ள மற்ற நகரங்கள் சி நகரங்கள் என்றும் வகைப்படுத்தப்பட்டு அதற்கேற்ப கரும்பூஞ்சை நோய்க்கான சிகிச்சை கட்டணத்தை அரசு நிர்ணயித்திருக்கிறது. ஏ வகை நகரங்களில் தனி வார்டில் சிகிச்சை கட்டணம் 4,000 ரூபாய், பி வகை நகரங்களில் 3,000 ரூபாய், சி வகை நகரங்களில் 2,400 ரூபாய் கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதுவே வெண்டிலேட்டர் வசதியுடன் தீவிர சிகிச்சை பிரிவு என்றால் 7,500 ரூபாய், ரூ.5,500 மற்றும் 4,500 ரூபாய் கட்டணமாக செலுத்தவேண்டும். வெண்டிலேட்டர் வசதியுடன் தீவிர சிகிச்சை பிரிவில் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை அளிக்க ஏ வகை நகரம் என்றால் 9,500 ரூபாய் கட்டணம். பி வகை நகரத்தில் 6,700 ரூபாயும், சி வகை நகரத்தில் 5,400 ரூபாயும் கரும்பூஞ்சை சிகிச்சை கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது. மும்பை மற்றும் அதனை ஒட்டிய தானே, நவிமும்பை, கல்யான்டோப்பி வாலி, புனே, நாக்பூர் உள்ளிட்ட நகரங்கள் ஏ வகை நகரங்களாக வகைப்படுத்தப்பட்டுள்ளன. மாவட்ட தலைநகரங்கள் அனைத்தும் பி வகை நகரங்களாகவும், இவை நீங்கலாக மற்ற நகர்ப்புறங்களை சி வகை நகரங்களாகவும் வகைப்படுத்தப்பட்டுள்ளன. மஹாராஷ்டிராவில் கரும்பூஞ்சை நோயால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 5 ஆயிரத்தை தாண்டியுள்ளது குறிப்பிடத்தக்கது.
சிலந்தி ஆற்றின் குறுக்கே அணை கட்டுவது தொடர்பாக சுற்றுச்சூழல் அனுமதி பெறப்பட்டுள்ளதா? : கேரள அரசுக்கு பசுமை தீர்ப்பாயம் கேள்வி
ரேபரேலி வாக்குச்சாவடிகளில் ராகுல்காந்தி ஆய்வு: வாக்குச்சாவடிகளுக்கு சென்ற ராகுலுக்கு உற்சாக வரவேற்பு அளித்து, ஆர்வமாக புகைப்படம் எடுத்த வாக்காளர்கள்
பெங்களூருவில் உள்ள பண்ணை வீட்டில் சட்டவிரோதமாக நடந்த ரேவ் பார்ட்டி: ரூ.50 லட்சம் மதிப்புள்ள போதை மாத்திரைகள் பறிமுதல்
ஐடி, மாநில லஞ்ச ஒழிப்பு துறை போதும் சிபிஐ, அமலாக்கத்துறை ஆபீஸ்களை மூட வேண்டும்: அகிலேஷ் யாதவ் காட்டம்