மயிலாடுதுறை: மயிலாடுதுறையில் ஐ.எஸ்.ஐ.எஸ். அமைப்பை சேர்ந்த வாலிபர் கைது செய்யப்பட்டார். கோவை மரக்கடை சந்தன்தெருவை சேர்ந்த அப்துல் ரகுமான் மகன் முகமது ஆசிக்(30). ஐ.எஸ்.ஐ.எஸ். அமைப்பை சேர்ந்த இவர், கோவையில் கடந்த 2018ம் ஆண்டு மத மோதலை உருவாக்குவதற்காக திட்டம் தீட்டியதாக, தேசிய புலனாய்வு துறை (என்.ஐ.ஏ.) அதிகாரிகளால் கைது செய்யப்பட்டு கோவை சிறையில் அடைக்கப்பட்டார். தற்போது இந்த வழக்கு சென்னை பூந்தமல்லி சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. ஜாமீனில் வெளிவந்த முகமது ஆசிக், மயிலாடுதுறை மாவட்டம் நீடூரில் தங்கியிருந்து, அங்குள்ள ஒரு கோழி கடையில் வேலை பார்த்து வந்தார்.