முக்கிய செய்தி இந்தியா அதிதீவிர புயலாக இருந்த யாஸ் ஆழ்ந்த காற்றழுத்தமாக வலுவிழந்துள்ளதாக இந்திய வானிலை மையம் தகவல் May 27, 2021 இந்திய வானிலை ஆய்வு மையம் யாஸ் டெல்லி: அதிதீவிர புயலாக இருந்த யாஸ் ஆழ்ந்த காற்றழுத்தமாக வலுவிழந்துள்ளதாக இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது. நேற்று காலை 9.15 மணிக்கு ஒடிசா மாநிலம் பாத்ரக் மாவட்டம் தாம்ரா துறைமுகத்தின் வடபகுதியில் புயல் கரையை கடக்கத்தொடங்கியது. புயலின் கண் பகுதி கரையை கடந்தபோது, மணிக்கு 130 கி.மீ. முதல் 145 கி.மீ. வேகத்தில் பலத்த சூறாவளி காற்று வீசியது. கடல் கொந்தளிப்பாக காணப்பட்டது. 2 மீட்டர் முதல் 3 மீட்டர் உயரத்துக்கு அலை எழும்பியது. அத்துடன் பலத்த மழை கொட்டித்தீர்த்தது. பாலசோர், பாத்ரக் ஆகிய மாவட்டங்களின் கடலோர கிராமங்களில் கடல் நீர் புகுந்தது. கனமழை காரணமாக, புதாபலாங் ஆற்றில் நீர்மட்டம் 21 மீட்டர் அளவுக்கு உயர்ந்தது. வங்க கடலில் சில நாட்களுக்கு முன்பு உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி, புயலாக மாறியது. ‘யாஸ்’ என்று பெயரிடப்பட்ட அந்த புயல், மிக தீவிர புயலாக நேற்று முன்தினம் உருவெடுத்தது. வடக்கு மற்றும் வடமேற்கு திசையில் மணிக்கு 17 கி.மீ. வேகத்தில் நகர்ந்தது.
நாகர்கோவிலில் பஸ் நிலையங்கள், ரயில் நிலையங்களில் ப்ரீபெய்டு ஆட்டோ திட்டம் வருமா? பயணிகளிடம் கட்டண கொள்ளையை தடுக்க கோரிக்கை
நீங்கள் பாஜகவுக்கு வாக்களித்தால் நான் மீண்டும் சிறைக்கு செல்ல வேண்டும்: சிந்தித்து வாக்களியுங்கள்.! டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் பரப்புரை
பெண் காவலர்கள் குறித்து அவதூறாக பேசிய வழக்கில் யூடியூபர் சவுக்கு சங்கரை மே 28ம் தேதி வரை நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்க உத்தரவு
தமிழகத்தில் நெல்லை, தூத்துக்குடி உள்ளிட்ட 22 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்
மழையின்போது அசம்பாவிதம் நேரிட்டால் பேரிடர் மேலாண்மைத் துறைக்கு தகவல் தெரிவிக்க வேண்டும் : மாவட்ட ஆட்சியர்களுக்கு அறிவுறுத்தல்!!
மே 18-ல் குமரி, நெல்லை, தென்காசி, தூத்துக்குடியில் கன மற்றும் மிக கனமழைக்கு வாய்ப்பு: வானிலை மையம் தகவல்
கோயில் என்பது அனைவருக்கும் பொதுவானது; திருவிழாவில் அனைத்து சமூகத்தவர்களும் பங்கேற்க வேண்டும் : ஐகோர்ட் கிளை கருத்து
தமிழகத்தில் 8 மாவட்டங்களில் டெங்கு பாதிப்பு அதிகரிப்பு.. நோய்த்தடுப்பு நடவடிக்கைகளை துரிதப்படுத்துக : சுகாதாரத்துறை அறிவுறுத்தல்
தொழில்நுட்ப கோளாறு சரி செய்யப்பட்டு பச்சை வழித்தடத்தில் மெட்ரோ ரயில் சேவை மீண்டும் இயக்கம்: மெட்ரோ நிர்வாக அதிகாரிகள் தகவல்
அரசின் திட்டங்களால் தமிழ்நாடு முதன்மை மாநிலமாகத் திகழ்கிறது! மக்களின் வாழ்வாதாரமும் உயர்கிறது!! : திமுக பெருமிதம்
தமிழ்நாட்டில் உள்ள அய்யாக்கண்ணுவுக்கு வாரணாசியில் என்ன வேலை? அங்கு யார் வாக்களிப்பார்கள்?: உச்சநீதிமன்றம் காட்டம்!!
330 நாட்கள் சிறையில் உள்ளார் என்பதை ஒரு காரணமாக சொல்ல முடியாது : ஜாமீன் கேட்ட செந்தில் பாலாஜிக்கு ஷாக் கொடுத்த நீதிபதிகள்