பாகல்பூர்: பீகார் மாநிலம் பாகல்பூர் மாவட்டம் உச்சககானில் வசிக்கும் கவுதம் குமார் என்பவருக்கும், பாங்கா மாவட்டம் பாரத்சிலா கிராமத்தில் வசிக்கும் கும்குமுமாரி என்பவருக்கும் கடந்த ஜனவரி மாதம் திருமணம் உறுதி செய்யப்பட்டது. ஏற்கனவே, கொரோனா பரவல் காரணமாக கடந்த ஆண்டு திருமணம் ஒத்திவைக்கப்பட்டது. தற்போது பீகாரில் கொரோனாவின் இரண்டாவது அலை தாக்கியதால், ஊரடங்கு கடுமையாக்கப்பட்டுள்ளது. அதனால், திருமணம் மீண்டும் ஒத்திவைக்கப்பட்டது. இந்நிலையில், கடந்த வெள்ளிக்கிழமை மணமகன் கவுதம் குமார், திருமண உடையணிந்து, மணமகளின் சொந்த ஊரான பாரத்சிலா கிராமத்திற்கு 24 கி.மீ தூரம் சைக்கிளில் சென்றார். மணமகனை, மணமகள் குடும்பத்தினர் பாரம்பரிய சடங்குகளுடன் வரவேற்றனர்.