பார்மா: இத்தாலியில் நடைபெற்ற எமிலியா ரோமாக்னா ஓபன் டென்னிஸ் தொடரின் மகளிர் ஒற்றையர் மற்றும் இரட்டையர் பிரிவில் 17 வயது அமெரிக்க வீராங்கனை கோரி காப் சாம்பியன் பட்டம் வென்று அசத்தினார். மகளிர் ஒற்றையர் பிரிவு பைனலில் சீனாவின் கியாங் வாங்குடன் மோதிய காப் அதிரடியாக விளையாடி 6-1, 6-3 என்ற நேர் செட்களில் மிக எளிதாக வென்று கோப்பையை முத்தமிட்டார். இது அவர் வென்ற 2வது டபுள்யு.டி.ஏ சாம்பியன் பட்டமாகும். முன்னதாக, 2017ல் 15வது வயது சிறுமியாக அவர் லின்ஸ் ஓபன் தொடரில் பட்டம் வென்று சாதனை படைத்திருந்தார். அந்த தொடரின் பைனலில் பிரெஞ்ச் ஓபன் சாம்பியன் ஜெலினா ஆஸ்டபென்கோவை வீழ்த்தினார். தற்போது 19 மாதங்களுக்குப் பிறகு 2வது பட்டம் வென்றுள்ளார்.