இந்திய கிரிக்கெட் அணியின் சுழற்பந்துவீச்சாளர் யுஸ்வேந்திர சாஹல். ஐபிஎல்லில் இவர் பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணிக்காக ஆடி வருகிறார். அண்மையில் இவரின் பெற்றோருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது. இதில் இருந்து தாயார் மீண்டுள்ள நிலையில், தந்தை மோசமான நிலையில், குர்கானில் உள்ள மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இந்நிலையில் நேற்று டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். இதுபற்றி சாஹல் கூறுகையில், என் பெற்றோர் நோய்த்தொற்றுக்குள்ளான செய்தியைக் கேட்டபோது ஐபிஎல்லில் இருந்து ஓய்வு எடுக்க திட்டமிட்டிருந்தேன். பெற்றோர் வீட்டில் தனியாக இருக்கும்போது விளையாட்டில் கவனம் செலுத்துவது கடினம்.