சென்னை: கரிசல் இலக்கியத்தின் தந்தை, ராஜநாராயணன் இறுதிச் சடங்குகளின்போது அரசின் சார்பில் மரியாதை அளித்தது. அவருக்கு சிலை நிறுவி, மணிமண்டபம் கட்டப்படும் என அறிவித்ததற்கு முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு மதிமுக பொதுச்செயலாளர் வைகோ நன்றி தெரிவித்துள்ளார். இதுகுறித்து, வைகோ வெளியிட்ட அறிக்கை: தமிழ்நாட்டின் வட்டார வழக்குச் சொற்களை இலக்கியத்தில் அறிமுகம் செய்து, ஒரு புதிய எழுத்து நடையை ஆக்கியவர், கரிசல் இலக்கியத்தின் தந்தை, ராஜநாராயணன். அவரது இறுதிச் சடங்குகளின்போது, தமிழ்நாட்டு அரசின் சார்பில் மரியாதை அளித்துச் சிறப்பித்ததற்கும், கோவில்பட்டியில் அவருக்கு சிலை நிறுவி, மணிமண்டபம் கட்டப்படும் என அறிவித்ததற்காகவும், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.