ஹிசார்: அரியானாவில் 300க்கும் ேமற்பட்ட சடலங்களை எரியூட்டிய மாநகராட்சி அதிகாரி, கொரோனா தொற்று பாதிப்பால் பலியானார். அரியானா மாநிலம் ஹிசார் மாநகராட்சி அதிகாரி பிரவீன் குமார் (43). இவர், கொரோனா வைரஸ் பாதிப்புக்கு ஆளான நோயாளிகளின் சடலங்களை தகனம் செய்யும் குழுவின் தலைவராக நியமிக்கப்பட்டார். கடந்தாண்டு முதல் ஹிசார் மாநகராட்சி எல்லைக்குட்பட்ட பகுதியில், கொேரானா தொற்றால் இறந்தவர்களின் 300க்கும் மேற்பட்ட நோயாளிகளின் சடலங்களை எரியூட்டி தகனம் செய்வதற்கான நடைமுறைகளை கண்காணித்து வந்தார்.