இந்தியா குஜராத்தில் கடும் சேதங்களை ஏற்படுத்தியிருக்கும் டவ்தே புயல் பாதிப்பு குறித்து மோடி ஹெலிகாப்டரில் சென்று ஆய்வு May 19, 2021 மோடி குஜராத் குஜராத்: குஜராத்தில் கடும் சேதங்களை ஏற்படுத்தியிருக்கும் டவ்தே புயல் பாதிப்புகளை பிரதமர் மோடி ஹெலிகாப்டரில் சென்று ஆய்வு செய்து வருகிறார். குஜராத்தில் நேற்று முன்தினம் இரவு கரையைக் கடந்த டவ்தே புயல் கடும் சேதத்தை ஏற்படுத்தி உள்ளது. புயல் மற்றும் வெள்ளத்துக்கு ஏழு பேர் பலியாகி உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. நுாற்றுக்கணக்கான வீடுகள் சேதம் அடைந்தன. மரங்கள் சாய்ந்ததால், மின் வினியோகம் துண்டிக்கப்பட்டுள்ளது. ராணுவத்தினர், விழுந்து கிடந்த மரங்கள், மின்கம்பங்கள் ஆகியவற்றை அகற்றி, போக்குவரத்து வசதியை ஏற்படுத்தினர். புயல் சேத விபரங்களை கணக்கெடுக்கும் பணியில் அரசு அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர். புயல் சேதங்களை பார்வையிடுவதற்காக, பிரதமர் மோடி இன்று குஜராத் சென்றார். காலை 9.30 மணிக்கு விமானம் மூலம் குஜராத் மாநிலம் பவ்நகர் சென்ற பிரதமர் மோடி, மாநிலத்தில் புயலால் பாதிக்கப்பட்ட இடங்களை ஹெலிகாப்டரில் இருந்தபடி ஆய்வு செய்து வருகிறார். பிரதமருடன் குஜராத் முதல்-மந்திரி விஜய் ரூபானியும் சென்றுள்ளார். உனா, டியு, ஜாபராபாத், மஹுவா போன்ற பகுதிகளில் ஆய்வு நடத்திய பின்னர், ஆமதாபாத்தில் நடக்கும் மறுஆய்வுக் கூட்டத்திலும் பங்கேற்கவுள்ளார். அதனை தொடர்ந்து ஆமதாபாத்தில், அதிகாரிகளுடன் ஆலோசனையும் நடத்த உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்நிலையில் புயலால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து ஆலோசனையில் ஈடுபட உள்ளனர்.
மக்களவை தேர்தல் வாக்குப்பதிவு தொடர்பான புள்ளி விவரங்கள் மற்றும் முரண்பாடு கவலை அளிக்கிறது: சீதாராம் யெச்சூரி
கர்நாடகத்தின் தர்வாட் தொகுதியில் பாஜக-வுக்கு நெருக்கடி: 5வது முறையாக களமிறங்கும் பிரகலாத் ஜோஷிக்கு எதிர்ப்பு
புதுச்சேரியில் உடல் பருமன் சிகிச்சையால் உயிரிழந்த இளைஞரின் பெற்றோர் முதல்வர் ரங்கசாமியை சந்தித்தனர்..!!
இந்திரா காந்தி, சோனியா காந்தி இருவரும் பல முறை போட்டியிட்டு வெற்றி பெற்ற ரேபரேலி மக்களவைத் தொகுதியில் களம் இறங்கினார் ராகுல் காந்தி!!