இந்தியா டெல்லி சர்தார் படேல் சிகிச்சை மையத்தில் கொரோனா நோயாளிகளுக்கு யோகா பயிற்சி!: மன அழுத்தத்தை போக்க நடவடிக்கை..!! May 17, 2021 கொரோனா தில்லி சர்தார் படேல் சிகிச்சை மையம் டெல்லி: டெல்லியில் உள்ள சர்தார் படேல் சிகிச்சை மையத்தில் அனுமதிக்கப்பட்டுள்ள கொரோனா நோயாளிகளுக்கு யோகா பயிற்சி அளிக்கப்படுகிறது. இந்தியாவில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பின் வேகம் அதிகரித்துக்கொண்டே செல்கிறது. நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரிப்பதால் மருத்துவமனைகளில் படுக்கைகள் நிரம்பி வழிகின்றன. பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டாலும் பாதிப்பு குறைந்த பாடில்லை. பல இடங்களில் படுக்கைகள் இன்றி நோயாளிகள் திண்டாடி வருகின்றனர். இந்நிலையில் டெல்லியில் உள்ள கொரோனா சிகிச்சை மையத்தில் நோயாளிகளின் மன அழுத்தத்தை போக்கும் விதமாக யோகா பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. டெல்லியில் இந்தோ திபெத்தின் எல்லை பாதுகாப்பு போலீஸ்படை சார்பில் சர்தார் படேல் கொரோனா சிகிச்சை மையம் அமைக்கப்பட்டுள்ளது. இங்குள்ள ஆக்சிஜன் படுக்கைகளில் 300 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இங்கு சிகிச்சை பெற்று வருபவர்களுக்கு யோகா மற்றும் தியான பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. மன அழுத்தத்தை தளர்த்துவதற்காக இந்த பயிற்சி அளிக்கப்படுவதாக இந்தோ திபெத்தின் போலீஸ் படை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கடந்த ஏப்ரல் 26ம் தேதி முதல் ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆக்சிஜன் தேவைப்படும் கொரோனா நோயாளிகள் இங்கு அனுமதிக்கப்பட்டதாகவும் யோகா பயிற்சி அவர்களின் மன அழுத்தத்தை தளர்த்த உதவுவதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
நாடு முழுவதும் 13 மாநிலங்களில் உள்ள 88 மக்களவை தொகுதிகளில் நடைபெற்ற 2ம் கட்ட தேர்தல் வாக்குப்பதிவு நிறைவு!
பிரிஜ் பூஷணுக்கு எதிரான பாலியல் வழக்கு: மே 7ம் தேதி குற்றச்சாட்டுகளை பதிவு செய்ய டெல்லி நீதிமன்றம் ஆணை!!
பிரதமர் மோடி இன்னும் ஓரிரு நாட்களில் மேடையில் கண்ணீர் விட்டு அழுவதை பார்க்கலாம்: ராகுல் காந்தி விமர்சனம்
கர்நாடக மாநிலம் சிக்கபல்லாபூர் தொகுதியில் வாக்காளர்களுக்கு பணம் தர முயன்ற பாஜக வேட்பாளரிடம் இருந்து ரூ.4.8 கோடி பறிமுதல்; போலீஸ் விசாரணை..!!
ரயில்கள் ரத்து மூலம் இஸ்லாமியர்களை வாக்களிக்க முடியாமல் தடுக்கும் பா.ஜ.க.வின் சதி அம்பலம்: காங்கிரஸ் சாடல்
பிரைவசி வசதியை நீக்க வலியுறுத்தினால் இந்தியாவில் சேவையை நிறுத்த வேண்டியிருக்கும்: வாட்ஸ்ஆப் நிறுவனம் எச்சரிக்கை!!
சின்னங்கள் பொருத்தும் எந்திரங்களை மே 1ம் தேதி முதல் பாதுகாக்க வேண்டும்: தேர்தல் ஆணையத்துக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு