தமிழகம் வேகமெடுக்கும் தொற்று பரவல்!: தருமபுரம் ஆதீனம் கல்லூரியில் 100 படுக்கைகளுடன் கொரோனா சிகிச்சை மையம் திறப்பு..!! May 16, 2021 தருமபுரம் ஆதீனம் கல்லூரி மயிலாடுதுறை: மயிலாடுதுறை தருமபுரம் ஆதீனம் மடத்திற்கு சொந்தமான கல்லூரியில் 100 படுக்கைகள் கொண்ட கொரோனா சிகிச்சை மையம் அமைக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் உயர்ந்துகொண்டே செல்கிறது. இதனை கட்டுப்படுத்த அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. இருப்பினும் தினசரி நோய் பாதிப்பு அதிகரிப்பதால் மருத்துவமனைகள் நிரம்பி வழிகின்றன. ஆக்சிஜன் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. படுக்கை வசதி இன்றி நோயாளிகள் பலரும் திண்டாடி வருகின்றனர். இந்நிலையில், தருமபுரம் ஆதீனம் கல்லூரியில் 100 படுக்கைகளுடன் கொரோனா சிகிச்சை மையம் திறக்கப்பட்டுள்ளது. மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் 780 படுக்கை வசதிகளும் அங்குள்ள கொரோனா சிறப்பு சிகிச்சை மையத்தில் 70 படுக்கைகளும் உள்ளன. மயிலாடுதுறையில் தொற்றால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனை கருத்தில் கொண்டு தருமபுரம் ஆதீனத்திற்கு சொந்தமான கல்லூரியை கொரோனா சிகிச்சைக்கு வழங்க நிர்வாகம் முன்வந்தது. அதன்படி 100 படுக்கைகள் கொண்ட கொரோனா சிகிச்சை மையம் கல்லூரி வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ளது. தருமபுரம் ஆதீனத்தின் மடாதிபதி மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள், சிகிச்சை மையத்தை மயிலாடுதுறை அரசு தலைமை மருத்துவரிடம் ஒப்படைத்தார். தருமபுர ஆதீனம் சார்பில் முதலமைச்சரின் கொரோனா நிவாரண நிதிக்கு 11 லட்சம் ரூபாய் வழங்கப்பட்டுள்ளதாக மடாதிபதி தெரிவித்தார். முன்னதாக ஆதீன மடத்தின் சார்பில் தினசரி 2000 பேருக்கு கபசூர குடிநீர் வழங்கும் திட்டத்தையும் அவர் தொடங்கி வைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்தித்து 50க்கும் மேற்பட்ட அமைப்பினர், சங்கங்கள் திமுகவுக்கு ஆதரவு: இந்தியா கூட்டணி வெற்றிக்கு பாடுபடுவதாக உறுதி
ஆழ்வார்பேட்டையில் பயங்கரம்; மதுபான பார் மேற்கூரை இடிந்து 3 பேர் பலி: திருநங்கையும் உயிரிழந்த பரிதாபம்
புதிய தலைமை செயலக கட்டிட வழக்கை அரசு முடித்து வைத்ததை எதிர்த்து அதிமுக மனுக்கள் தேவையற்றது: ஐகோர்ட் தீர்ப்பு
துணை கலெக்டர், டிஎஸ்பி பதவி குரூப் 1 இறுதி தேர்வு முடிவு வெளியீடு: அதிக இடங்களை கைப்பற்றி மாணவிகள் சாதனை
அதிமுக ஆட்சியில் போலி அனுமதி எண் வைத்து தணிக்கையில் முறைகேடு செய்த மாவட்ட பதிவாளர் சஸ்பெண்ட்: பதிவுத்துறை ஐஜி ஆலிவர் பொன்ராஜ் அதிரடி
நாடாளுமன்ற தேர்தலில் அசம்பாவிதங்களை தடுக்க 21 ஆயிரம் ரவுடிகள் மீது போலீஸ் தீவிர கண்காணிப்பு: ‘பறவை’ செயலி மூலமும் விசாரணை
பறக்கும் படை கெடுபிடியால் மக்கள் பாதிப்பு; தேர்தல் நாளான ஏப்.19 வரை கடையடைப்பு போராட்டம்: விக்கிரமராஜா எச்சரிக்கை
“வீழட்டும் பாசிசம், வெல்லட்டும் ஜனநாயகம்” ஒன்றியத்தில் மலரட்டும் திராவிட மாடல் ஆட்சி என்ற புத்தகம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார்
துணை கலெக்டர், போலீஸ் டிஎஸ்பி உள்ளிட்ட குரூப் 1 பதவியில் 90 காலி பணியிடங்கள்: ஜூலை 13ல் முதல்நிலை தேர்வு
மோடியை மிஞ்சும் வகையில் வியூகம்; தமிழகத்தில் அடுத்தடுத்து ராகுல் பிரசாரம்: 4 இடத்தில் பேசுவதற்கு ஏற்பாடு
பங்குனி திருவிழாவை முன்னிட்டு சுப்பிரமணியசுவாமி-தெய்வானை திருக்கல்யாணம் கோலாகலம்: திருப்பரங்குன்றத்தில் பக்தர்கள் பரவசம்