புதுச்சேரி: புதுச்சேரிக்கு தேவையான அனைத்து மருத்துவ உதவிகளையும் மத்திய அரசு செய்து தரும் என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். புதுச்சேரியில் கொரோனா சூழல் குறித்த விவரங்களை ஆளுநர் தமிழிசையிடம் பிரதமர் மோடி கேட்டறிந்தார். மேலும், கொரோனாவுக்கு சிகிச்சை பெற்றுவரும் முதல்வர் ரங்கசாமி விரைவில் பூரண நலம்பெற பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.