திருமலை: ஆந்திராவில் கொரோனா இரண்டாது அலையில் கடந்த 24 மணி நேரத்தில் 90 ஆயிரத்து 750 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதில் 21 ஆயிரத்து 452 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. மாநிலத்தில் கடந்த 24 மணி நேரத்தில் வைரஸ் தொற்று பாதிப்பால் சிகிச்சை பலனின்றி 89 பேர் உயிரிழந்தனர், இன்று 19,095 குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.