திசையன்விளை : நெல்லை மாவட்டம் திசையன்விளை அருகே உள்ள பெட்டைக்குளம் மெயின்ரோட்டில் டாஸ்மாக் மதுக்கடை உள்ளது. பொது ஊரடங்கை முன்னிட்டு இந்த டாஸ்மாக் கடை, கடந்த 9ம் தேதி இரவு முதல் பூட்டப்பட்டுள்ளது. இந்நிலையில் நேற்று காலை டாஸ்மாக் கடையின் சுவற்றில் துளையிடப்பட்டு இருப்பதை பார்த்த அவ்வழியாக சென்ற மக்கள், கடை விற்பனையாளர்கள் மாடசாமி, ஜெபராஜ் ஆகியோருக்கு தகவல் கொடுத்தனர். அவர்கள் விரைந்து வந்து பார்த்து, டாஸ்மாக் மேற்பார்வையாளர் குமாருக்கு தகவல் அளித்தனர்.