சென்னை: வெளிநாடுகளில் இருந்து தமிழகத்திற்கு நன்கொடையாக பெறப்படும் நிவாரணப் பொருட்களுக்கு ஐ.ஜி.எஸ்.டி. வரியில் இருந்து விலக்கழிக்கப்பட்டுள்ளது. மத்திய அரசின் உத்தரவை கண்காணிக்க ஐ.ஏ.எஸ் அதிகாரிகளை நியமித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் உள்ள துறைமுகங்கள் மற்றும் விமான நிலையங்களுக்கு சிறப்பு அதிகாரிகளை தமிழக அரசு நியமித்துள்ளது.