இந்தியா வேகமெடுக்கும் கொரோனா!: டெல்லி குருத்வாராவில் 300 படுக்கைகளுடன் கூடிய பிரம்மாண்ட கொரோனா சிகிச்சை மையம் உருவாக்கம்..!! May 10, 2021 டெல்லி குருத்வாரா டெல்லி: டெல்லியில் உள்ள சீக்கியர்களின் குருத்வாரா 300 படுக்கைகளுடன் கூடிய பிரம்மாண்டமான கொரோனா சிகிச்சை மையமாக மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. டெல்லியில் கொரோனா தொற்று பரவல் நாளுக்கு நாள் கடுமையாக அதிகரித்து வருகிறது. இதனால் ஏராளமானோர் மருத்துவமனைகளில் படுக்கைகள் கிடைக்காமல் தவிக்கும் நிலை நீடித்து வருகிறது. இந்நிலையில் டெல்லியில் உள்ள ராகாப்கான்ச் குருத்வாராவில் பிரம்மாண்டமான கொரோனா சிகிச்சை மையமாக மாற்றப்பட்டுள்ளது. இங்கு 300 படுக்கைகள், ஆக்சிஜன் செறிவூட்டிகள், தேவையான மருத்துவர்கள், மருத்துவ பணியாளர்கள் என அனைத்து வசதிகளும் ஏற்படுத்தப்பட்டிருக்கின்றன. நட்சத்திர விடுதி போல உருவாக்கப்பட்டிருக்கும் இந்த சிகிச்சை மையம், இன்று பிற்பகல் 2 மணி முதல் நடைமுறைக்கு வருவதாகவும் இதற்காக நடிகர் அமிதாப் பச்சன் 2 கோடி ரூபாய் நிதி வழங்கி உதவியதாகவும் குருத்வாரா நிர்வாகம் தெரிவித்திருக்கிறது. இதனிடையே டெல்லியில் கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் வகையில் முழு ஊரடங்கை அம்மாநில அரசு மேலும் 1 வாரத்திற்கு நீட்டித்திருக்கிறது. இம்முறை மெட்ரோ ரயில் சேவைக்கு அனுமதி இல்லை என்றும் பொது இடங்களிலோ, மண்டபங்களிலோ திருமண நிகழ்ச்சிகளுக்கு அனுமதி இல்லை எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
மல்யுத்த வீராங்கனைகள் பாலியல் துன்புறுத்தல் பிரிஜ்பூஷன் மீது குற்றச்சாட்டு பதிவு: டெல்லி நீதிமன்றம் உத்தரவு
ஊழியர்கள் பற்றாக்குறை ஏர் இந்தியா எக்ஸ்பிரசின் 75 விமானங்கள் ரத்து: நாளை முதல் வழக்கம் போல் விமானங்கள் இயங்கும் என அறிவிப்பு
மேற்கு வங்க ஆளுநர் மீதான பாலியல் புகார் குடியரசு தலைவருக்கு கடிதம் எழுதுவதே நீதி கிடைக்க ஒரே வழி: பாதிக்கப்பட்ட பெண் முடிவு
அமலாக்கத்துறையின் கடும் எதிர்ப்பையும் மீறி கெஜ்ரிவாலுக்கு இடைக்கால ஜாமீன்: உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு
வெளிநாடு வாழ் இந்தியர்கள் மூலம் சொந்தங்களுக்கு ரூ.9.28 லட்சம் கோடி அனுப்பி வைப்பு: ஐ.நா அறிக்கையில் தகவல்
மக்களவை தேர்தல் வாக்குப்பதிவு விவரங்களை உடனுக்குடன் முழுமையாக வழங்க வலியுறுத்தல்: இந்தியா கூட்டணி தலைவர்கள்
பாஜக வெற்றி பெற்றால் ஒடிசாவை நம்பர் ஒன் மாநிலமாக்குவோம் என பிரதமர் மோடி பேச்சு : பாஜக ஆளும் மாநிலங்கள் நம்பர் ஒன் ஆகாதது ஏன் என விமர்சனம்
வீராங்கனைகளுக்கு பாலியல் தொல்லை அளித்த வழக்கில் பாஜக எம்.பி. பிரஜ் பூஷண் மீது நீதிமன்றத்தில் குற்றச்சாட்டுகள் பதிவு..!!