புதுடெல்லி: இந்தியாவில் நடைபெற்று வந்த 14வது ஐபிஎல் சீசன், வீரர்களுக்கு ஏற்பட்ட கொரோனா பாதிப்பினால் பாதியில் நிறுத்தப்பட்டு வீரர்கள் தற்போது அவரவர் நாடுகளுக்கு திருப்பி அனுப்பப் பட்டு வருகின்றனர். அந்த வகையில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் இடம்பெற்றிருந்த இங்கிலாந்து அணியின் முன்னணி வீரரான ஜாஸ் பட்லரும் நாடு திரும்பினார். அவர் நாடு திரும்புவதற்கு முன்னர் இந்த ஐபிஎல் தொடரில் அவருடன் துவக்க வீரராக களமிறங்கிய இந்தியாவின் இளம் வீரர் யாஷஸ்வி ஜெய்ஸ்வாலுக்கு பரிசாக ஒன்ைற கொடுத்தார். அது குறித்த விவரம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.