அரசியல் கோவில்பட்டி தொகுதியில் அமைச்சர் கடம்பூர் ராஜூ தொடர்ந்து முன்னிலை: டிடிவி பின்னடைவு May 02, 2021 அமைச்சர் கடம்பூர் ராஜு கோவில்பட்டி டிடீவி கோவில்பட்டி: கோவில்பட்டி தொகுதியில் அமைச்சர் கடம்பூர் ராஜூ அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரனை விட 1,578 வாக்குகள் அதிகம் பெற்று முன்னிலையில் உள்ளார். தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி தொகுதியில் அ.ம.மு.க. சார்பில் அதன் பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரனும், அ.தி.மு.க. சார்பில் அமைச்சர் கடம்பூர் ராஜூம், தி.மு.க. கூட்டணி சார்பில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியை சேர்ந்த சீனிவாசனும் போட்டியிட்டனர். தொடர்ந்து வாக்கு எந்திரத்தில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டது.அதில் முதல் சுற்றின் முடிவில் அமைச்சர் கடம்பூர் ராஜூ2,607 ஓட்டுகள் பெற்று முன்னிலையில் இருந்தார். டி.டி.வி. தினகரனுக்கு 2,183 ஓட்டுகள் கிடைத்து இருந்தது.இதன் மூலம் டி.டி.வி. தினகரனை விட சுமார் 424 வாக்குகள் அதிகம் பெற்று அமைச்சர் கடம்பூர் ராஜூ முன்னிலையில் உள்ளார். கம்யூனிஸ்டு வேட்பாளர் சீனிவாசனுக்கு 1,485 ஓட்டுகளும், நாம் தமிழர் வேட்பாளர் கோமதிக்கு 359 வாக்குகளும், மக்கள் நீதி மய்யம் வேட்பாளர் கதிரவனுக்கு 92 வாக்குகளும் கிடைத்து இருந்தது. 2-வது சுற்று முடிவில் அமைச்சர் கடம்பூர் ராஜூ 1,888 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை பெற்றார். 3-வது சுற்று முடிவில் அமைச்சர் கடம்பூர் ராஜூ 1,513 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை பெற்றார். 5-வது சுற்று முடிவில் அமைச்சர் கடம்பூர் ராஜூக்கும் டி.டி.வி. தினகரனுக்கும் இடையே கடும் போட்டி நிலவியது. அந்த சுற்றின் முடிவில் 19 வாக்குகள் மட்டுமே அமைச்சர் கூடுதலாக பெற்றிருந்தார். 7-வது சுற்று முடிவில் அமைச்சர் கடம்பூர் ராஜூ 1,578 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை பெற்றார்.
பணம் சுருட்டல், கூலி ஆட்களை வைத்து வேலை; தேர்தல் முடிவுக்குப் பிறகு தமிழக பாஜ கூண்டோடு மாற்றம்: அமித்ஷா, மோடி அதிரடி முடிவு
உ.பி பாஜக அரசை தலிபான் அரசு என்று கூறிய மாயாவதியின் அரசியல் வாரிசு மீது வழக்கு: 3 வேட்பாளர்கள் மீதும் வழக்குப்பதிவு
சந்தேஷ்காலியில் வெடிபொருள் கண்டெடுப்பு; திரிணாமுல் கட்சிக்கு எதிராக சதி நடக்கிறது: பாஜக மீது மம்தா பானர்ஜி குற்றச்சாட்டு
புயலுக்கு கேட்ட நிவாரணம் கிடைக்கவில்லை; மாநில அரசை ஒன்றிய அரசு தொடர்ந்து வஞ்சித்து வருகிறது: எடப்பாடி பழனிசாமி கண்டனம்
வாக்காளர் பட்டியலில் பெயர்கள் நீக்கம் என குற்றச்சாட்டு; போனில் பேசியதை டேப் செய்யும் அதிபுத்திசாலி முன்பே கூறாதது ஏன்?.. அண்ணாமலைக்கு செல்லூர் ராஜூ சரமாரி கேள்வி
நடிகை ராதிகா போட்டியிட்ட விருதுநகர் தொகுதியில் ரூ40 லட்சம் சுருட்டிய பாஜ நிர்வாகிகள்: சொந்த கட்சியினரே போஸ்டர் ஒட்டியதால் பரபரப்பு
நாடாளுமன்ற தேர்தல் முடிந்ததையடுத்து முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் தலைவர்கள் சந்திப்பு: எம்எல்ஏக்களும் வாழ்த்து பெற்றனர்
பட்டியலின, பழங்குடியின மக்களின் உரிமைகளுக்காக வாழ்நாளை அர்ப்பணித்தவர் ஸ்டேன் சுவாமி: செல்வப்பெருந்தகை அறிக்கை
வெயிலின் தாக்கம் அதிகரிப்பு மக்களின் தாகத்தை தீர்க்க நீர்-மோர் பந்தல்: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வேண்டுகோள்