திண்டிவனம் : திண்டிவனம் அடுத்த மயிலம் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட வெங்கந்தூர் கிராமத்தில் சுமார் 500க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். கிராமத்தில் கடந்த 4 ஆண்டுகளாக குடிநீர் வராததால் பொதுமக்கள் பல கிலோ மீட்டர் தூரம் சென்று குடிநீர் சேகரித்து வரும் சூழ்நிலை ஏற்பட்டது. இதுகுறித்து தினகரன் நாளிதழில் படத்துடன் செய்தி வெளியிடப்பட்டது.