இந்தியா 'பிரதமர் நரேந்திர மோடி தான் உலகின் சிறந்த திகில் பட இயக்குநர்'!: இயக்குநர் ராம் கோபால் வர்மா காட்டமான பதிவு..!! May 02, 2021 நரேந்திர மோடி ராம் கோபால் வர்மா டெல்லி: இந்திய பிரதமர் நரேந்திர மோடி தான் உலகின் சிறந்த திகில் பட இயக்குநர் என்று திரைப்பட இயக்குநர் ராம் கோபால் வர்மா தெரிவித்துள்ளார். இந்தியாவில் சமீப காலமாக கொரோனா 2ம் அலையின் வேகம் உச்சத்தை தொட்டு வருகிறது. இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு 3,689 பேர் உயிரிழந்துள்ளனர். புதிதாக 3,92,488 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன் மூலம், நாட்டின் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 1,95,57,457 ஆக உயர்ந்துள்ளது. கொரோனா 2ம் அலை வேகமாக பரவ மத்திய, மாநில அரசுகளின் முன்னெச்சரிக்கை நடவடிக்கை இல்லாமையே காரணம் என பலரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். மேலும் கொரோனா தடுப்பு பணியில், மத்திய அரசின் செயல்பாடு குறித்து திரை நட்சத்திரங்கள் பலரும் மத்திய அரசுக்கு ஆதரவாகவும், எதிராகவும் சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வருகின்றனர். இந்நிலையில், மோடிதான் உலகின் சிறந்த திகில் பட இயக்குநர் என்று இயக்குநர் ராம் கோபால் வர்மா காட்டமான பதிவு ஒன்றினை வெளியிட்டிருக்கிறார். இதுகுறித்து, இயக்குநர் ராம் கோபால் வர்மா தனது ட்விட்டர் பக்கத்தில், கொரோனா தாக்கி உயிரிழந்தவர்களின் உடல்களை எரிக்கும் புகைப்படத்தை பதிவிட்டு இதுபோன்ற அழகான திகிலூட்டும் காட்சிகளை தந்தமைக்கு பிரதமர் நரேந்திர மோடிக்கு நன்றி என்றும் குறிப்பிட்டுள்ளார்.
விவசாய கடன் ரத்து எனக்கூறி 16 ஆண்டாகிறது இன்னும் எத்தனை காலம்தான் பாஜ பொய் வாக்குறுதி தரும்: காங்கிரஸ் கேள்வி
3 சுயேட்சை எம்எல்ஏக்கள் ஆதரவு வாபஸ் அரியானாவில் பா.ஜ அரசு பெரும்பான்மை இழந்தது: சட்டப்பேரவை தேர்தல் நடத்த காங்கிரஸ் கோரிக்கை
அம்பானி, அதானிக்காக உழைப்பவர் மோடி: ஜார்க்கண்டில் ராகுல் பிரசாரம்: இந்தியா கூட்டணி பல கோடி மக்களை லட்சாதிபதி ஆக்கும்
ஹாசன் மட்டும் இன்றி பெங்களூரு, மைசூரு என 25 ஆயிரம் பென்டிரைவ் வினியோகம்: டி.கே.சிவகுமார் மீது குமாரசாமி குற்றச்சாட்டு
ரூ100 கோடியா, ரூ1100 கோடியா? கெஜ்ரிவால் வழக்கில் அமலாக்கத்துறைக்கு உச்ச நீதிமன்றம் கிடுக்கிப்பிடி: விசாரணை நாளைக்கு ஒத்திவைப்பு
திருடர்கள் புகுந்த நிலையில் மீண்டும் பரபரப்பு; ரூ7 கோடி கேட்டு ஆந்திர முன்னாள் அமைச்சருக்கு வெடிகுண்டு மிரட்டல்: வீட்டில் கடிதங்கள் வீசிய ஆசாமி கைது