பெங்களூரு: கொரோனா தொற்று அச்சம் காரணமாக யாரும் உதவிக்கு வராததால் பெண் ஒருவர் சாலையில் துடிதுடித்து உயிரிழந்த சம்பவம் கர்நாடகாவில் நடந்துள்ளது. கோலார் மாவட்டம், முல்பாகல் தாலுகா, சங்கண்டஹள்ளி கிராமத்தை சேர்ந்த கங்கம்மா (பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது). 50 வயதான இவர், சில நாட்களாக காய்ச்சல், மூச்சு திணறல் பாதிப்பால் அவதிப்பட்டு வந்தார். நேற்று காலை மருத்துவமனைக்கு செல்வதற்காக வீட்டில் இருந்து புறப்பட்டார். அப்போது, சாலையில் திடீரென மயங்கி விழுந்தார். அவருக்கு முதலுதவி செய்ய குடும்பத்தினர் மட்டுமல்ல கிராமத்தினர் கூட யாரும் முன் வரவில்லை. கொரோனா தொற்று பாதித்திருக்கும் என்பதால் உதவ வராமல் இருந்தனர். அதே நேரம், சாலையில் உயிருக்கு போராடி கொண்டிருந்தவரை செல்ேபான் மூலம் படம் பிடித்து கொண்டிருந்தனர். இதனால், உதவி கிடைக்காமல் அப்பெண் துடித்துடித்து உயிரிழந்தார்.