தமிழகம் திருவள்ளூர் அரசு மருத்துவமனை வளாகத்தில் மலைபோல் குவிந்து கிடக்கும் மருத்துவ கழிவுகள்!: தொற்று பரவும் அபாயம்..!! Apr 28, 2021 திருவள்ளூர் திருவள்ளூர்: திருவள்ளூர் அரசு மருத்துவமனை வளாகத்தில் மலைபோல் குவிந்து கிடக்கும் மலைபோல குவித்து வைக்கப்பட்டிருக்கும் மருத்துவ கழிவுகளால் சுற்றுவட்டார பகுதிகளில் தொற்று பரவும் அபாயம் ஏற்பட்டிருக்கிறது. திருவள்ளூர் அரசு தலைமை மருத்துவமனையில் தினந்தோறும் கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கையானது அதிகரித்து கொண்டே செல்கிறது. மருத்துவமனையில் உள்ள சுமார் 150 படுக்கைகளும் கொரோனா நோயாளிகளால் நிரம்பி வழிகிறது. இதனால் படுக்கை வசதி இன்றி நோயாளிகள் நீண்ட நேரம் ஆம்புலன்சில் காத்திருக்கும் சூழல் ஏற்பட்டிருக்கிறது. இந்நிலையில், இந்த மருத்துவமனையில் பயன்படுத்தப்படும் கவச உடைகள், கழிவுகள், ஊசிகள், மருத்துவ உபகரணங்கள் உள்ளிட்டவை அங்கிருந்து அகற்றப்பட்டு மருத்துவமனை வளாகத்திலேயே மலைபோல் குவிக்கப்பட்டுள்ளது. இந்த கழிவுகளை காகங்கள் கொத்தி சென்று பல்வேறு இடங்களில் வீசி செல்கின்றன. இதனால் கொரோனா தொற்று பரவும் அபாயம் இருப்பதாக அங்குள்ள பொதுமக்கள் அச்சம் தெரிவிக்கின்றன. குழந்தைகள் மருத்துவமனை பின்புறமே இந்த மருத்துவ கழிவுகள் குவியலாக சேர்த்து வைக்கப்பட்டுள்ளதால் குழந்தைகளுக்கு எளிதாக தொற்று ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே மருத்துவமனை வளாகத்தில் குவித்து வைக்கப்பட்டுள்ள மருத்துவ கழிவுகளை முறையாக கையாண்டு உடனடியாக அப்பகுதியில் இருந்து அப்புறப்படுத்த வேண்டும் என்று பொதுமக்களும், நோயாளிகளும் கோரிக்கைவிடுத்துள்ளனர்.
தமிழ்நாட்டில் அக்னி நட்சத்திரம் என்று கூறப்படும் கத்தரி வெயில் நாளை தொடங்குகிறது: மே 28 வரை வெயிலின் தாக்கம் அதிகரிக்கும் என கணிப்பு
நாமக்கல்லில் சிக்கன் ரைஸ் சாப்பிட்டு முதியவர் உயிரிழந்த வழக்கில் கல்லூரி மாணவர் கைது: வழக்கில் புதிய திருப்பம்
போலி சான்றிதழ்களை தடுக்க நடவடிக்கை மாசு கட்டுப்பாட்டு சான்றிதழ் வழங்க புதிய செயலி அறிமுகம்: போக்குவரத்து துறை ஆணையர் தகவல்
இணையவழி சூதாட்டம் தடை செய்யப்பட்டுள்ளதால் விளம்பரங்களை ஒளிபரப்பும் நிறுவனம், பிரபலங்கள் மீது சட்டப்படி நடவடிக்கை: தமிழக அரசு எச்சரிக்கை
நாடாளுமன்ற தேர்தல் முடிவுகள் வெளியானதும் தமிழக சட்டப்பேரவை கூட்டம் ஜூன் 2வது வாரம் கூடுகிறது? துறை ரீதியான மானிய கோரிக்கைகள் மீது விவாதம்
தஞ்சை பெருவுடையார் கோயிலை சிதைக்கும் நோக்கில் அறநிலையத்துறை செயல்படுவதாக தவறான செய்தி வெளியிடுவதா? சட்டப்படி நடவடிக்கை என அரசு எச்சரிக்கை
பெண்களுக்கான இலவச பேருந்து பயண திட்டம் எக்ஸ்பிரஸ், சொகுசு பேருந்துகளுக்கும் நீட்டிக்க ஆய்வு: மாநகர போக்குவரத்து கழக அதிகாரிகள் தகவல்
பிரஸ், காவல், டாக்டர், வக்கீல் ஸ்டிக்கர்களுக்கான காலக்கெடு முடிந்த நிலையில் சென்னை முழுவதும் 150 இடங்களில் போக்குவரத்து போலீஸ் வாகன சோதனை: மோட்டார் வாகன சட்டப்படி ஸ்டிக்கர்களை கிழித்து அபராதம் விதிப்பு