சென்னை: ரெம்டெசிவிர் மருந்து தட்டுப்பாட்டை போக்குவதற்கு தமிழக சுகாதாரத்துறை, தமிழ்நாடு மருத்துவ பணிகள் கழகம் சார்பில் நேற்று கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிறப்பு மையம் தொடங்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா இரண்டாவது அலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக ஒரு லட்சத்துக்கும் மேற்பட்டோர் சிகிச்சையில் உள்ளனர். தொற்றை கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகின்றன. இந்நிலையில் கொரோனா நோயாளிகளுக்கு ரெம்டெசிவர் என்ற மருந்து பயனளிக்கிறது. இதனால் பெரும்பாலான கொரோனா நோயாளிகளுக்கு ரெம்டெசிவர் மருந்தை டாக்டர்கள் பரிந்துரை செய்து வருகின்றனர். இதில், தனியார் மருத்துவமனைகளில் மருந்து இல்லை என்றாலும் டாக்டர்கள் பரிந்துரை செய்து வெளியே இருந்து வாங்கி வரும்படி நோயாளிகளின் உறவினர்களிடம் தெரிவித்தனர். இதனால் டாக்டர்களின் பரிந்துரை சீட்டை வைத்து கொண்டு நோயாளிகளின் உறவினர்கள் தெரு தெருவாக அலைவதாகவும், மருந்துகள் தட்டுப்பாட்டை பயன்படுத்தி கள்ளச்சந்தையில் கூடுதல் விலைக்கு விற்பதாக தொடர்ந்து புகார்கள் வந்துள்ளது.