திருவாரூர் : திருவாரூர் அருகே கொடிக்கால்பாளையத்தில் நகராட்சியின் சிறுவர் பூங்காவினை சீரமைத்து தர வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.திருவாரூர் நகரில் நகராட்சி சார்பில் பல்வேறு இடங்களில் பூங்காக்கள் இருந்து வருகின்றன. இதுமட்டுமின்றி புதிதாக நகரம் அமைக்கப்படும்போது பூங்காவிற்கு என இடம் ஒதுக்கப்பட்டு அது போன்ற இடங்களும் பூங்காக்கள் அமைக்கப்படாமல் குப்பை மேடுகளாக இருந்து வருகின்றன. இந்நிலையில் திருவாரூர் நகராட்சி 8வது வார்டு கொடிக்கால்பாளையத்தில் காயிதேமில்லத் சிறுவர் பூங்கா கடந்த 75 ஆண்டுகளுக்கும் மேலாக இருந்து வருகிறது.