ஆவடி: ஆவடி அருகே திருமுல்லைவாயல்-சோழம்பேடு சாலையில் ஒரு எரிவாயு தகன மேடை உள்ளது. இது, கடந்த 13 ஆண்டுகளுக்கு முன் ஆவடி நகராட்சியால் கட்டப்பட்டது. இங்கு திருமுல்லைவாயல், அண்ணனூர், ஆவடி உள்ளிட்ட பகுதிகளில் இருந்து சடலங்களை கொண்டு வந்து எரியூட்டி செல்கின்றனர். காலப்போக்கில் இந்த எரிவாயு தகனமேடையை ஆவடி நகராட்சி முறையாக பராமரிக்காமல் விட்டுவிட்டது. தற்போது இதன் பராமரிப்பை தனியாரிடம் ஆவடி மாநகராட்சி ஒப்படைத்துள்ளது. அவர்களும் எரிவாயு தகனமேடையை முறையாக பராமரிக்கவில்லை எனக் கூறப்படுகிறது. இதனால் முறையான பராமரிப்பின்றி இருக்கும் எரிவாயு தகனமேடையில் சடலங்களை எரிக்கும்போது, அதிகளவு நச்சு புகையும் துர்நாற்றமும் வீசி வருகிறது.