இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 3,32,730 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

டெல்லி: இந்தியாவில்கடந்த 24 மணி நேரத்தில் 3,32,730 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் இந்தியா முழுவதும் இதுவரை பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,62,63,695 -ஆக அதிகரித்துள்ளது. நாட்டில் இன்று ஒரே நாளில் 2,263 பேர்உயிரிழந்த நிலையில் இதுவரை கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1,86,920 -ஆக அதிகரித்துள்ளது. மேலும் நாடு முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களில் இதுவரை 1,36,48,159 பேர் குணமடைந்து வீடு திரும்பிய நிலையில் தற்போது 24,28,616 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Related Stories: