ஹைதராபாத்: ஆந்திர மாநிலம் கடப்பாவில் செம்மரம் வெட்டி கடத்த முயன்றதாக தமிழகத்தை சேர்ந்த 8 கூலி தொழிலாளர்கள் கைது செய்யப்பட்டிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. ஆந்திர மாநிலம் கடப்பா மாவட்டம் கட்டிகோட்டா என்ற இடத்தில் வன அதிகாரிகள் ரோந்து சென்றனர். அப்போது வன அதிகாரிகளை கண்டதும் அங்கிருந்த கூலி தொழிலாளிகள் தப்பி ஓடினர். அவர்களில் தமிழகத்தை சேர்ந்த 8 பேரை சுற்றிவளைத்து வன அதிகாரிகள் கைது செய்துள்ளதாகவும், 10 லட்சம் ரூபாய் மதிப்புள்ள 16 செம்மர கட்டைகளை பறிமுதல் செய்துள்ளதாகவும் மாவட்ட வன அதிகாரி ரவீந்திரா கூறியுள்ளார். இதுகுறித்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த வன அதிகாரி, செம்மரம் வெட்டி கடத்த முயன்றதாக முதலில் 5 பேர் கைது செய்யப்பட்டனர்.