கரூர்: கரூர் ஏமூர் பகுதியில் இருந்து கத்தாளப்பட்டி பகுதிக்கு செல்லும் சாலையை விரைந்து தார்ச்சாலையாக மாற்ற வேண்டும் என பகுதியினர் எதிர்பார்ப்பில் உள்ளனர்.கரூர் மாவட்டம், ஏமூர் பஞ்சாயத்து பகுதியில் இருந்து குடியிருப்பு வழியாக கத்தாளப்பட்டி பிரதான சாலைக்கு செல்லும் மண்சாலை உள்ளது. பல ஆண்டுகளாக மண் சாலையாக இருந்த இதனை தார்ச்சாலையாக மாற்ற வேண்டும் என பகுதியினர் கோரிக்கை வைத்திருந்தனர். இதனடிப்படையில், சில வாரங்களுக்கு முன்பு சாலையை தார்ச்சாலையாக மாற்றும் வகையில் ஜல்லிக்கற்கள் கொட்டப்பட்டன.