கரூர் ஏமூர் பகுதியில் ஜல்லிகள் கொட்டியதோடு கிடப்பில் போடப்பட்ட சாலை பணி: விரைந்து முடிக்க மக்கள் கோரிக்கை

கரூர்: கரூர் ஏமூர் பகுதியில் இருந்து கத்தாளப்பட்டி பகுதிக்கு செல்லும் சாலையை விரைந்து தார்ச்சாலையாக மாற்ற வேண்டும் என பகுதியினர் எதிர்பார்ப்பில் உள்ளனர்.கரூர் மாவட்டம், ஏமூர் பஞ்சாயத்து பகுதியில் இருந்து குடியிருப்பு வழியாக கத்தாளப்பட்டி பிரதான சாலைக்கு செல்லும் மண்சாலை உள்ளது. பல ஆண்டுகளாக மண் சாலையாக இருந்த இதனை தார்ச்சாலையாக  மாற்ற வேண்டும் என பகுதியினர் கோரிக்கை வைத்திருந்தனர். இதனடிப்படையில், சில வாரங்களுக்கு முன்பு சாலையை தார்ச்சாலையாக மாற்றும் வகையில் ஜல்லிக்கற்கள் கொட்டப்பட்டன.

அதற்கு பிறகு  பணிகள் மேற்கொள்ளாமல் தொய்வு ஏற்பட்டதால், தற்போது நடந்து செல்லக் கூட முடியாத அளவுக்கு மக்கள் சிரமப்பட்டு வருகின்றனர். எனவே, ஜல்லிக்கற்களை பரவி, தார்ச்சாலை பணிகளை விரைந்து மேற்கொள்ள வேண்டும் என பகுதியினர் கோரிக்கை வைத்துள்ளனர். சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கத்தாளப்பட்டி சாலையை விரைந்து  தார்ச்சாலையாக மாற்ற தேவையான ஏற்பாடுகளை மேற்கொள்ள வேண்டும் என அனைவரும் கோரிக்கை வைத்துள்ளனர்.

Related Stories: