கொரோனா அச்சம் காரணமாக சித்தி வீட்டில் இருந்தபோது விபரீதம் பாடகியின் 15 வயது மகள் பலாத்காரம்

* பாதிரியாருக்கு விருந்து வைத்ததும் விசாரணையில் அம்பலம்

* சித்தி, கணவர் உட்பட 4 பேர் மீது பாய்ந்தது போக்சோ சட்டம்

* தலைமறைவானவர்களை பிடிக்க தனிப்படை அமைப்பு

சென்னை: ஐதராபாத்தில் ஏற்பட்ட கொரோனா அச்சம் காரணமாக, சென்னையில் உள்ள தங்கை வீட்டில் தங்கி இருந்த பிரபல பாடகி ஒருவரின் 15 வயது மகளுக்கு உறவினர்கள் 2 பேர் தொடர்ந்து பாலியல் தொந்தரவு கொடுத்து வந்துள்ளனர். அதோடு இல்லாமல் பாதிரியார் ஒருவருக்கும் விருந்து வைத்ததும் போலீஸ் விசாரணையில் அம்பலமாகி உள்ளது. தெலங்கானா மாநிலம் ஐதராபாத் பிருந்தாவனம் காலனியை சேர்ந்தவர் பிரபல பின்னணி பாடகி ஒருவர். இவர் தொலைக்காட்சி ஒன்றில் நிகழ்ச்சி நடுவராகவும் இருந்து வருகிறார்.

கீழ்ப்பாக்கம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் பிரபல பாடகி தனது 15 வயது மகளுடன் பரபரப்பு புகார் ஒன்று அளித்தார். அந்த புகாரில், எனது 15 வயது மகளை, தங்கை வீட்டில் விட்டு சென்றபோது, தங்கையின் கணவர், தங்கை கணவரின் சகோதரி மகன் மற்றும் கீழ்ப்பாக்கத்தில் உள்ள பாதிரியார் ஆகியோர் பாலியல் தொந்தரவு கொடுத்து வந்துள்ளதாகவும், எனவே சம்பந்தப்பட்ட நபர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் புகாரில் கூறியிருந்தார்.

அதன்படி போலீசார் விசாரணை நடத்தினர். அதில் பாடகியின் தங்கையின் கணவர், கணவரின் சகோதரி மகன் மற்றும் பாதிரியார் என 3 பேர் சிறுமிக்கு பல முறை பாலியல் தொந்தரவு கொடுத்தது தெரியவந்தது.

அதைதொடர்ந்து கீழ்ப்பாக்கம் அனைத்து மகளிர் போலீசார் பாடகியின் தங்கை, தங்கையின் கணவர், தங்கை கணவரின் சகோதரி மகன் மற்றும் கீழ்ப்பாக்கத்தை சேர்ந்த பாதிரியார் ஹென்றி ஆகியோர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்தனர். பாடகி காவல்நிலையத்தில் புகார் அளித்த தகவலை தொடர்ந்து பாதிரியார், பாடகியின் தங்கை, அவரது கணவர், உறவினர் என 4 பேர் தலைமறைவாகிவிட்டனர். அவர்களை பிடிக்க போலீஸ் கமிஷனர் உத்தரவுப்படி தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.

பாடகியின் புகாரின் படி நடத்திய விசாரணை குறித்து மகளிர் போலீசார் கூறியதாவது: ‘‘கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக பாடகி தன் மகளுக்கு 6 வயது இருக்கும்போது சென்னை சாலிகிராமத்தில் உள்ள தனது தங்கை வீட்டில் விட்டுள்ளார். அங்கு தங்கி சிறுமி 5ம் வகுப்பு வரை படித்துள்ளார். அப்போது பாடகியின் தங்கை கணவர் சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார். பயத்தில் சிறுமி இதை வெளியில் சொல்லாமல் இருந்துள்ளார்.

பின்னர், தங்கை வீட்டில் இருந்த தனது மகளை பாடகி ஐதராபாத்துக்கு தன்னுடன் அழைத்து சென்று விட்டார். ஐதராபாத்திலேயே உள்ள பள்ளியில் சிறுமி படித்து வந்தார்.

 இதற்கிடையே கடந்த ஆண்டு ஐதராபாத்தில் கொரோனா தொற்று அதிகளவில் இருந்ததால் பள்ளிகளுக்கு தொடர் விடுமுறை விடப்பட்டது. சிறுமியின் தாய் பாடகி மற்றும் தனியார் தொலைக்காட்சியில் நிகழ்ச்சி நடுவராக இருந்தார். பணிச்சுமை காரணமாக மகளை, கடந்த ஆண்டு சென்னை சாலிகிராமத்தில் உள்ள தனது தங்கை வீட்டில் மீண்டும் விட்டு சென்றுள்ளார். இந்நிலையில், தன் மனைவி தூங்கிய பிறகு, சிறுமி அறைக்கு சென்று சிறு வயதில் பாலியல் தொந்தரவு தந்ததுபோலவே மீண்டும் செய்துள்ளார். அதேநேரம் பாடகியின் தங்கை கணவரின் சகோதரி மகன், தனது மாமா வீட்டிற்கு வந்துள்ளார். அப்போது தனது மாமா சிறுமியிடம் ஒன்றாக இருப்பதை பார்த்த அவன், மாமா மற்றும் அத்தை வீட்டில் இல்லாதபோது சிறுமியை மிரட்டி தனது மாமா போன்று பாலியல் தொந்தரவு கொடுத்து வந்துள்ளார்.

இது குறித்து வெளியில் சொன்னால் கொலை செய்துவிடுவேன் என்று மிரட்டியும் வந்துள்ளார். பாடகியின் தங்கை கீழ்ப்பாக்கத்தில் உள்ள தேவாலயத்திற்கு ஒவ்வொரு வாரமும் தனது குடும்பத்துடன் வந்து செல்வது வழக்கம். அப்போது தனது சகோதரி போன்று அவரும் நன்றாக பாடுவார். உடன் சிறுமியும் பாடியுள்ளார். அப்போது தேவாலயத்தில் உள்ள பாதிரியார் ஹென்றி சிறுமியை பாராட்டியுள்ளார். பாடகியின் சகோதரி கணவருக்கு பாதிரியார் ஹென்றி மிகவும் நெருக்கமாக இருந்தார். இதனால் சிறுமி உங்களுக்கு பிடித்திருந்தால் சொல்லுங்கள் என்று கூறியுள்ளார். அதற்கு பாதிரியார் பிடித்து இருப்பதாக கூறியுள்ளார். உடனே பாடகியின் சகோதரி கணவர் பாதிரியாருடன் நெருக்கமாக இருக்கும்படி கட்டாயப்படுத்தி இருவரையும் ஒன்றாக இருக்கும்படி செய்துள்ளார். இது பல நாட்கள் தொடர்ந்துள்ளது.

இதற்கிடையே கொரோனா தொற்று குறைந்த உடன் பாடகி தனது மகளை சென்னைக்கு வந்து ஐதராபாத்துக்கு அழைத்து சென்றுள்ளார். அப்போது மகளின் உடலில் பல இடங்களில் சிறு காயங்கள் மற்றும் மாற்றங்கள் இருந்ததை கண்டுள்ளார். இதனால் சந்தேகமடைந்த பாடகி தனது மகளிடம் கேட்டுள்ளார். அப்போது சிறுமி அழுதபடி நடந்த சம்பவத்தை கூறியுள்ளார். அதை கேட்டு அதிர்ச்சியடைந்த பாடகி இதை ஏன் சித்தியிடம் சொல்லவில்லை என்று கேட்டுள்ளார். அதற்கு சிறுமி, சித்திக்கும் இது தெரியும், அவரிடம் சொன்னால் ‘ஜாலியாக இருந்துவிட்டு வாடா’ என்று கூறுகிறார். இதனால் என்னால் ஒன்றும் செய்ய முடியவில்லை என்று கூறி அழுதுள்ளார். அதன்பிறகு பாடகி சென்னைக்கு வந்து புகார் அளித்தார்”.

இவ்வாறு போலீசார் தெரிவித்தனர். இதனால் புகாருக்குள்ளானவர்களை போலீசார் தனிப்படை அமைத்து தேடி வருகின்றனர். சித்திக்கும் இது தெரியும், அவரிடம் சொன்னால் ‘ஜாலியாக இருந்துவிட்டு வாடா’ என்று கூறுகிறார். இதனால்

என்னால் ஒன்றும் செய்ய முடியவில்லை.

Related Stories: