பெங்களூரு: கர்நாடக இந்துநாடார் அசோசியேசன் ஏப்ரல் மாத கூட்டம் தலைவர் சந்திரசேகரன் தலைமையில் நடந்தது. இதில் பேசிய தலைவர் சந்திரசேகரன் பெங்களூரு தமிழ்ச்சங்க தேர்தலில் வெற்றி பெற்றுள்ள தலைவர் கோ.தாமோதரன், துணை தலைவர் பழனி, செயலாளர் சம்பத், பொருளர் இளங்கோவன் உள்ளிட்ட புதிய நிர்வாகிகள் அனைவருக்கும் வாழ்த்து தெரிவித்தார். இதைத்தொடர்ந்து பேசிய துணை தலைவர் சுரேஷ்குமார், பெங்களூரு தமிழ்ச்சங்கத்தின் நிர்வாகம் தமிழர்களின் கையில் மீண்டும் வந்துள்ளது.