சென்னை: தமிழகத்தில் கொரோனா தடுப்பு விதிகளை மீறியதாக நேற்று ஒரே நாளில் சுமார் ஒரு கோடி ரூபாய் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது. முகக்கவசம் அணியாமல் சென்றால் 200 ரூபாய், எச்சில் துப்பினாலோ, தனிமனித இடைவெளியை கடைபிடிக்க தவறினாலோ தலா 500 ரூபாய், விதிமீறும் கடைகளுக்கு 5000 ரூபாய் என அபராதம் வசூலிக்கப்பட்டு வருகிறது.
அதன்படி முகக்கவசம் அணியாமல் சென்றதாக சென்னையை தவிர்த்து பிற நகரங்களில் நேற்று ஒரே நாளில் ரூ.89,61,300 அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது. தனிமனித இடைவெளியை கடைபிடிக்காததிற்காக ரூ.8,51,800 அபராதம் வசூல் செய்யப்பட்டுள்ளது. சென்னையை தவிர்த்து பிற பகுதிகளில் முகக்கவசம் அணியாததிற்காக இதுவரை 1.30 லட்சம் வழக்குகளும், தனிமனித இடைவெளியை கடைபிடிக்கத்திற்காக இதுவரை 6,465 வழக்குகளும் பதிவு செய்யப்பட்டுள்ளன.