திருமலை: திருப்பதி ஏழுமலையான் கோயிலில் கொரோனா பரவல் காரணமாக நேற்று வரை இலவச தரிசன டிக்கெட் வழங்கப்படும் என தேவஸ்தானம் அறிவித்துள்ள நிலையில் பக்தர்கள் எண்ணிக்கை திடீரென அதிகரித்தது. நேற்றைய தினம் இலவச தரிசன டிக்கெட் பெற்ற பக்தர்கள் இன்று காலை முதல் தரிசித்து வருகின்றனர். அதேவேளையில் இன்று முதல் கவுன்டர்களில் இலவச தரிசன டிக்கெட் வழங்குவது முற்றிலும் நிறுத்தப்பட்டுள்ளது. மறு உத்தரவு வரும்வரை இலவச தரிசனம் ரத்து செய்யப்பட்டுள்ளது. எனவே நாளை முதல் இலவச தரிசன கிடையாது. இந்நிலையில் நேற்று அதிகாலை முதல் இரவு வரை 49 ஆயிரத்து 751 பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். சுவாமி தரிசனம் செய்த பக்தர்கள் உண்டியலில் ₹1.91 ேகாடியை காணிக்கையாக செலுத்தியுள்ளனர்.