திருவனந்தபுரம்: சபரிமலை ஐயப்பன் கோயில் நடை சித்திரை விஷூ பூஜைகளுக்காக நேற்று மாலை திறக்கப்பட்டது. வரும் 14ம் ேததி விஷு கணி தரிசனம் நடைபெறுகிறது. சபரிமலை ஐயப்பன் கோயிலில் மண்டல, மகர விளக்கு கால பூஜைகளுக்கு அடுத்த படியாக, சித்திரை விஷு பண்டிகையின் போது நடைபெறும் பூஜைகளில் தான் அதிகப்படியான பக்தர்கள் கலந்து கொள்வார்கள். இந்த வருட சித்திரை விஷு பண்டிகை வரும் 14ம் தேதி கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, நேற்று மாலை 5 மணிக்கு கோயில் நடை திறக்கப்பட்டது. இன்று முதல் 18ம் தேதி வரை தினமும் உதயாஸ்தமன பூஜை, படிபூஜை மற்றும் களபாபிஷேகம் உள்பட சிறப்பு பூஜைகள் நடைபெறும்.