புழல்: புழல் அடுத்த லட்சுமிபுரம் பாரதியார் தெரு சந்திப்பில் ரத்த காயங்களுடன் ஆண் சடலம் கிடப்பதாக நேற்று முன்தினம் மாலை 6 மணிக்கு புழல் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்ேபரில், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விசாரணையில், லட்சுமிபுரம் வெங்கடேஸ்வரா நகர் 3வது தெருவை சார்ந்த அன்பழகன் (52) என்பதும், இவர், கிண்டியில் உள்ள கார் கம்பெனியில் ஸ்டோர் கீப்பராக பணியாற்றியவர் என்பதும் தெரிய வந்தது. தொடர்ந்து, அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்தபோது, பைக்கில் வந்த 2 பேர் அன்பழகனை அடித்து கொன்றுவிட்டு தப்பியது பதிவாகி இருந்தது.