புதுடெல்லி: வெளியில் வேலைக்குச் சென்றுவரும் 30-50 வயதுக்கிடையே உள்ள இளைஞர்கள் தற்போதைய இரண்டாவது கொரோனா அலையால் நோய் தாக்குதலுக்கு இலக்காகி வருவதாக சுகாதாரத்துறை நிபுணர்கள் கூறியுள்ளனர்.நாடு முழுவதும் கொரோனா இரண்டாவது அலை பரவத்தொடங்கி பலரும் பாதிக்கப்பட்டு வருகின்றனர். டெல்லியை பொறுத்தவரை, தற்போது கொரோனா நான்காம் அலை வீசத்தொடங்கி தினசரி பாதிப்பு எண்ணிக்கையும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. தற்போதைய இந்த நான்காம் அலையால் அதிக அளவில் வேலைக்கு சென்றுவிட்டு வீடு திரும்பும் இளைஞர்கள் அதிக அளவில் பாதிப்புக்குள்ளாவதாக நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
இதுபற்றி அப்போலோ மருத்துவமனையின் மூத்த ஆலோசகர் சுரன்ஜித் சட்டர்ஜி கூறுகையில்,”இளைஞர்கள் அதிக அளவில் வெளியே வேலை செய்கிறார்கள்.