சண்டிகர்: கொரோனா 2ம் அலை தீவிரமாக பரவி வரும் நிலையில் குஜராத் மாநிலத்தில் கொரோனா நோயாளிகளை தரையில் படுக்கவைத்து சிகிச்சை மேற்கொள்ளப்படுவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தியா முழுவதும் கொரோனா 2ம் அலை தீவிரமாக பரவி வருகிறது. பல்வேறு மாநிலங்களில் கட்டுப்பாடுகள் கடுமையாக்கப்பட்டுள்ளன. இந்தியாவில் தினசரி தொற்று எண்ணிக்கையும் பலமடங்கு உயர்ந்துள்ளது. இந்நிலையில் குஜராத் மாநிலத்தின் பாவ்நகர் பகுதியில் உள்ள மருத்துவமனையில் கொரோனா நோயாளிகளை தரையில் படுக்கவைத்து சிகிச்சை அளிக்கும் வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன.