கடத்தூர்: கடத்தூர் அடுத்த ஒடசல்பட்டி கூட்ரோடு பகுதியில் சிக்னல் விளக்கு எரியாததால் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.கடத்தூர் அடுத்த ஒடசல்பட்டி கூட்ரோடு வழியாக அரூர், தர்மபுரி, கடத்தூர், பொம்மிடி, சேலம், ஓமலூர், திருப்பத்தூர் உள்ளிட்ட வழித்தடத்தில் இருந்து நூற்றுக்கணக்கான பேருந்துகளும் கனரக மற்றும் இருசக்கர வாகனங்கள் தினசரி சென்று வருகிறது. இந்நிலையில் இரவு நேரங்களில் போக்குவரத்து சிக்னல் விளக்குகள் சரிவர எரியாததால், தொடர் விபத்துகள் மற்றும் உயிரிழப்புகள் நடந்து வருகிறது.