புதுடெல்லி: நாடு முழுவதும் 100 இடங்களில் கொள்ளையடித்த 4 வங்கதேசத்தினரை போலீசார் கைது செய்தனர்.டெல்லி குற்றப்பிரிவு போலீசாருக்கு ஒரு கும்பல் ஹவுஸ்ஹாஸ் பகுதியில் கொள்ளையடிக்கப்போவதாக தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில் குற்றப்பிரிவு கூடுதல் கமிஷனர் ஷீபெஸ்சிங் தலைமையில் போலீசார் அந்த பகுதியில் குவிக்கப்பட்டனர். கொள்ளையர்கள் அருண்ஜெட்லி பூங்கா வழியாக போர்ட் ரோடுக்கு செல்வதாக கிடைத்த தகவலின் பேரில் அங்கு போலீசார் குவிக்கப்பட்டனர். அப்போது அந்த வழியாக வந்த ரபிக் லாஸ்கர்(33), முகமது சலீம்(26), அஜிசுல் ரெகுமான்(25), முகமது ரசாக்(36) ஆகிய 4 பேரை பிடித்தனர். அவர்கள் வங்கதேச நாட்டை சேர்ந்தவர்கள் என்பதும், கடந்த சில ஆண்டுகளுக்கு முன் சட்டவிரோதமாக இந்தியாவில் நுழைந்து டெல்லியில் வசித்து வருவதும் தெரியவந்தது. மேலும் பணம் எளிதாக சம்பாதிக்க ெகாள்ளை போன்ற சம்பவங்களில் ஈடுபட்டு வருவதும் கண்டுபிடிக்கப்பட்டது.