புதுடெல்லி: ஸ்டீவ் ஸ்மித், முதல் 3 வீரர்களில் ஒருவராக களமிறக்கப்படுவார் என டெல்லி கேப்பிடல்ஸ் அணியின் பயிற்சியாளர் ரிக்கி பாண்டிங் தெரிவித்துள்ளார். ரசிகர்களால் பெரிதும் கொண்டாடப்படுகிற ஐபிஎல் கிரிக்கெட் திருவிழா, நாளை மறுநாள் துவங்குகிறது. சென்னை சேப்பாக்கத்தில் நடைபெறும் முதல் போட்டியில் மும்பை இண்டியன்ஸ் அணியை எதிர்த்து, ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி களமிறங்குகிறது. வரும் 10ம் தேதி மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெறும் போட்டியில் டெல்லி கேப்பிடல்ஸ் அணியை எதிர்த்து, சென்னை சூப்பர் கிங்ஸ் மோதுகிறது. இப்போட்டிக்கான பயிற்சியில் டெல்லி வீரர்கள் தீவிரமாக உள்ளனர்.