திருவள்ளூர்: மதுரவாயலில் உள்ள வாக்குச்சாவடி ஒன்றில் தகாத வார்த்தைகளால் அமைச்சர் பெஞ்சமின் திட்டியதாக புகார் எழுந்துள்ளது. ஊரக தொழில் துறை அமைச்சர் அதிமுகவை சேர்ந்த பெஞ்சமின் மதுரவாயல் அருகாமையிலிருக்க கூடிய எம்.ஜி.ஆர். ஆதர்ஷ் பள்ளி அருகே வாக்களிக்க சென்ற போது தேர்தல் விதிமீறல்களில் ஈடுபட்டதாகவும் இதனை அப்பகுதி மக்கள் தட்டிக்கேட்டதாகவும் கூறப்படுகிறது. இதனால் அங்கிருக்கக்கூடிய வாக்காளர்களுக்கும், அவருக்கும் இடையே கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டிருக்கிறது. இந்நிலையில், அமைச்சர் பெஞ்சமின் வாக்காளர் ஒருவரை தகாத வார்த்தைகளால் திட்டியுள்ள வீடியோ காட்சியானது தற்போது சமூக வலைத்தளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.