திமுக பரப்புரையின் போது அடிதடி!: துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் மகனை கைது செய்ய மாவட்ட காவல்துறை உத்தரவு..!!

சென்னை: அடிதடி வழக்கில் துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் மகன் பிரவீனை கைது செய்ய மாவட்ட காவல்துறை உத்தரவிட்டுள்ளது. பொள்ளாச்சி ஜெயராமன் மகன் பிரவீன் உள்பட அதிமுகவினர் 7 பேரை கைது செய்ய மாவட்ட காவல் அதிகாரி உத்தரவிட்டுள்ளார். கடந்த 28ம் தேதி பொள்ளாச்சி அருகே ஒக்கிலிபாளையத்தில் திமுக தேர்தல் பரப்புரை கூட்டம் நடைபெற்றது. திமுக பரப்புரையின் போது அடிதடிகளில் ஈடுபட்டதாக அதிமுகவினர் 7 பேர் மற்றும் திமுகவினர் 4 பேர் மீது வழக்கு தொடரப்பட்டது. வழக்கில் சம்பந்தப்பட்டவரை கைது செய்யுமாறு மாவட்ட காவல்துறை அதிகாரி உத்தரவு பிறப்பித்துள்ளார்.

Related Stories: