தாம்பரம்: தாம்பரம் தொகுதி திமுக வேட்பாளர் எஸ்.ஆர்.ராஜா, தொகுதி முழுவதும் மக்களை நேரில் சந்தித்து, வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார். அவருக்கு பொதுமக்கள் வழியெங்கிலும் ஆரத்தி எடுத்து, மலர்தூவி பிரம்மாண்ட வரவேற்பு அளித்து வருகின்றனர்.அதன்படி நேற்று தாம்பரம் பகுதியில் நடந்து சென்று மக்களை சந்தித்து வாக்கு சேகரித்தார். அப்போது அவர் பேசுகையில், ‘திமுக ஆட்சியில் 2009ம் ஆண்டு கொண்டு வரப்பட்ட பாதாள சாக்கடை திட்டம், அதிமுக ஆட்சியில் 10 ஆண்டுகளாக முடிக்கப்படாமல் உள்ளது. அதிமுக ஆட்சியில் இதுவரை உள்ளாட்சி தேர்தல் நடைபெறாமல் உள்ளது. தாம்பரம் நகராட்சி, மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டு இருந்தால், இந்நேரம் பல்வேறு வளர்ச்சி பணிகள் நடைபெற்று இருக்கும்.