பெங்களூரு: பையப்பனஹள்ளிக்கும் ஒசூருக்கும் இடையேயான பாதையை இரட்டிப்பு ஆக்குவதற்கு எலக்ட்ரானிக் சிட்டிக்கு அருகே உள்ள ஹீலலிகே நிலையத்தில் உள்ள 1034 மரங்களை வெட்ட ரயில்வே உள்கட்டமைப்பு மேம்பாட்டு நிறுவனம் விண்ணப்பித்துள்ளது. இதற்கு பொதுமக்கள் தங்களின் ஆட்சேபனைகளை தெரிவிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து வனத்துறையின் பொது அறிவிப்பில், ஆயிரத்துக்கும் மேற்பட்ட மரங்கள் வெட்ட ரயில்ேவ உள்கட்டமைப்பு நிறுவனம் விண்ணப்பித்துள்ளது. கர்நாடக மரங்களை பாதுகாக்கும் சட்டத்தின்படி குடிமக்களிடமிருந்து பரிந்துரைகள் மற்றும் ஆட்சேபனைகள் வரவேற்க்கப்படுகிறது.