திருவில்லிபுத்தூர்: திருவில்லிபுத்தூரில் பெரிய மாரியம்மன் கோயில் பூக்குழி திருவிழா இன்று காலை கொடியேற்றத்துடன் துவங்கியது. விருதுநகர் மாவட்டம், திருவில்லிபுத்தூரில் உள்ள பெரிய மாரியம்மன் கோயிலில் ஒவ்வொரு ஆண்டும் பங்குனி மாதம் பூக்குழி திருவிழா நடைபெறும். இந்தாண்டு பங்குனி திருவிழா பூக்குழி திருவிழா ஏப்.11ல் நடைபெறுகிறது. இதையொட்டி இன்று காலை கொடியேற்றம் நடந்தது. முன்னதாக மேளதாளம் முழங்க 4 ரத வீதிகள் மற்றும் முக்கிய வீதிகள் வழியாக கோயிலுக்கு கொடி பட்டம் கொண்டு வரப்பட்டது. பின்னர் கோயில கொடிமரத்தில் கொடியேற்றப்பட்டது.